close
Choose your channels

ஜீவா-அருள்நிதி இணையும் புதிய படத்தில் பிரபல நாயகி

Saturday, December 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இரண்டு ஹீரோக்கள் படங்கள் அரிதாகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் நாயகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார்.

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஒரு நாயகியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு நாயகி குறித்த பரிசீலைனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறும்படங்கள் மூலம் பிரபலமான ராஜேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜீவா தற்போது கொரில்லா, ஜிப்ஸி, கீ ஆகிய படங்களிலும் அருள்நிதி தற்போது 'புகழேந்தி என்னும் நான்' என்ற படத்திலும் நடித்து வருகின்றனர். அதேபோல் கவுதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தற்போது 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.