close
Choose your channels

 ஹனிமூன் எங்கே? திருமணத்திற்கு பின் மஞ்சிமாவின் முதல் பேட்டி!

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின் மஞ்சிமா மோகன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஹனிமூன் எங்கே என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது என்பதும் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருதரப்பு பெற்றோரிடம் சம்மதம் பெற்று கடந்த 28ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை மஞ்சிமா மோகன் ஹனிமூன் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கௌதம் கார்த்திக்கின் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இருப்பதால் அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் ஹனிமூன் குறித்து திட்டமிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் போது ஹனிமூன் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.