close
Choose your channels

சிம்புவுடன் நடிப்பது ரொம்ப கஷ்டம். நடிகை மஞ்சிமா

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'என்னை அறிந்தால்' வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு, மஞ்சிமா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் நடித்தது குறித்த அனுபவங்களை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகை மஞ்சிமா பகிர்ந்துள்ளார்.

சிம்பு படப்பிடிப்பின்போது மிகவும் ஜாலியாகவும், சுறுசுறுப்பாக இருப்பார் என்றும், சீரியஸான காட்சிகளில் நடித்து கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது ஜோக் சொல்லி தன்னை சிரிக்க வைத்துவிடுவார் என்றும், பின்னர் மீண்டும் தான் சீரியஸ் மூடுக்கு வர அதிக சிரமப்பட வேண்டிய நிலை வரும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும் சிம்புவுடன் நடிப்பதில் வேறு எந்த பிரச்சனையும் தனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ளார்.

மிகப்பெரிய இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க முதலில் பயந்ததாகவும், ஆனால் அவர் செட்டில் ஒவ்வொரு ஷாட்டையும் ரிலாக்ஸ் ஆக எடுப்பதை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாக கூறினார். தான் கல்லூரியில் படிக்கும்போதே அவரை சிலமுறை காபி ஷாப்பில் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது அவரது இயக்கத்தில் நடிப்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை மஞ்சிமா ஏற்கனவே மலையாளத்தில் 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.