close
Choose your channels

நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த போலீஸ் புகார்: பிரபல இயக்குனர் கைது!

Saturday, December 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’அசுரன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் சமீபத்தில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன் மீது போலீஸ் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த புகாரில் சமூக வலைதளங்களில் தனது புகழுக்கு அவப்பெயரை ஸ்ரீகுமார் ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், ஸ்ரீகுமார் மேனன் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்

மஞ்சு வாரியரின் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்த திருவனந்தபுரம் போலீசார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை அடுத்து ஸ்ரீகுமார் மேனன் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து அவர் இன்று ஜாமினில் வெளிவந்துள்ளார்.

நடிகை மஞ்சு மஞ்சுவாரியரின் புகாரால் பிரபல இயக்குநர் கைதாகி ஜாமீனில் வெளிவந்து உள்ளது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.