மஞ்சுவாரியரின் இடுப்பை பிடித்த மர்ம நபர்.. கடை திறப்புவிழாவில் ஏற்பட்ட விபரீதம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, கூட்டத்தில் அவர் ரசிகர்களை நோக்கி கையை அசைத்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவருடைய இடுப்பை பிடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மலையாளம், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியார், தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "அசுரன்" படத்தில் அறிமுகமாகி, அதன் பிறகு அஜித்தின் "துணிவு", ரஜினியின் "வேட்டையன்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் கூட்டத்தில் புகுந்து மஞ்சுவாரியரின் இடுப்பை தொட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் அது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்றாலும், மஞ்சுவாரியர் அதை கண்டுகொள்ளாமல், ரசிகர் ஒருவருக்கு செல்பி எடுத்து கொடுத்து காரில் சென்று விட்டார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து, நடிகைகளுக்கு பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனமும், நடிகைகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டவருக்கு கண்டனமும் குவிந்து வருகிறது.
People 😡🙏 #ManjuWarrierpic.twitter.com/b2nfTau96B
— Prince in Exile || దారి తప్పిన బాటసారి.. .. .. (@ExilePrince_555) May 2, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments