ரூ.80 கோடி மோசடியா? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தவு..!

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்ளின் வங்கி கணக்கை முடக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’குணா’ படத்தின் ரெப்ரன்ஸ் உடன் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மலையாள திரை உலகில் இதுவரை இல்லாத அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள அரூர் என்ற பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்திற்காக நான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். படத்தின் தயாரிப்பாளர்கள் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீத தொகையை பங்காக தருகிறேன் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கு நீதிபதி சுனில் என்பவர் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின்னர் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோர்களது வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் 40 சதவீத பங்கு தொகை என்றால் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பாக தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாளை சம்பவம் உறுதி.. வெங்கட்பிரபுவின் அசத்தலான 'கோட்' அப்டேட் !

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. காலில் விழுந்து வணங்கிய ராகவா லாரன்ஸ்..!

நடிகர் விஜய் சென்னையில் சாய்பாபா கோயிலை கட்டிய நிலையில் அந்த கோயிலுக்கு வருகை தந்த நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நண்பர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

நடிகர் சாயாஷி ஷிண்டேவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல நான் குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை திடீர் விலகல்.. இவருக்கு பதில் இவர் யார் தெரியுமா?

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் திடீரென விலகுவதும் இதனை அடுத்து அந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று ஒரே ஒரு டைட்டில் கார்டு

துல்கர், ஜெயம்ரவியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு