close
Choose your channels

மன்மோகன்சிங் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு!

Tuesday, May 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பாரத பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்கள் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் மன்மோகன்சிங் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சாதாரண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விரைவாக உடல் நலம் தேறி வருவதால் இன்னும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.