close
Choose your channels

கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை 

Wednesday, May 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொடர்ச்சியாக இந்து விரோத பேச்சை கடைபிடித்து வரும் கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சு கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தலைவர்கள் முதல் பிரதமர் வரை கமல்ஹாசனின் சர்ச்சை கருத்துக்கு பதில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் செண்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் லஞ்சம் பெற்று கொண்டு, இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இந்து அமைப்புக்கள் இணைந்து, கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் எனவும் எச்சரித்தார்.

மேலும் கமல் ஒரு நல்ல நடிகர் என்றும், இந்து விரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டி கொண்டிருப்பதாகவும் மன்னார்குடி ஜீயர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.