தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை செய்யுங்கள்: மனோபாலா வேண்டுகோள்

சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தொடர்ந்து மன அழுத்தம் காரணமாகவும், பணிச்சுமை காரணமாகவும்ம் வாய்ப்பு கிடைக்காத காரணங்களாலும்ம் வறுமை உள்ளிட்ட காரணங்களாலும் அவ்வப்போது தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் தயவுசெய்து பணிச்சுமையை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என மனோபாலா கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சித்ராவின் அறையில் இருந்த அவரது கணவர் என்று கூறப்படும் ஹேமந்த் ரவி என்பவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்து சின்னத்திரை மற்றும் பெரியதிரை நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள் கூறியபோது ’சித்ரா மிகவும் வலிமையான பெண் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னத்திரையில் இதுபோன்ற தற்கொலைகள் அடிக்கடி நடக்கிறது. மன் அழுத்தம் உள்ளிட்ட எந்த ஒரு வேதனையையும் மனதுக்குள்ளே பூட்டி வைக்க வேண்டாம். நண்பர்களிடம் தயவு செய்து பகிருங்கள். நண்பர்கள் கண்டிப்பாக உதவி செய்ய தயாராக இருப்பார்கள். நாங்களும் உதவி செய்வோம். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் அவசரப்பட்டு இதுபோன்ற முடிவு எடுக்காதீர்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. எல்லோரும் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் தயவுசெய்து நண்பர்களிடம் மனம்விட்டு பேசுங்கள், மன அழுத்தம் நீங்கிவிடும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்த வைஷ்ணவி என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். வம்சம், தென்றல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் மன அழுத்தம் காரணமாகவும், ஷோபனா என்ற சின்னத்திரை நடிகை மன இறுக்கத்திற்கு ஆளாகியும் தற்கொலை செய்து கொண்டனர்.

மண் வாசனை உள்ளிட்ட தொடர்களில் நடித்த பிரதியுஷா கடந்த ஏப்ரல் மாதம் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சாய் பிரசாந்த் என்ற நடிகர் வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். சொந்த பந்தம் தொடர் நடிகை சபர்ணா மற்றும் மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை ஸ்ரவானி ஆகியோர் தங்கள் வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

More News

ஆரி, அனிதாவை டார்கெட் செய்யும் லவ்பெட் கேங்! நம்புங்கள் குரூப்பிஸமே இல்லை!

அர்ச்சனா தலைமையிலான லவ்பெட் குரூப் தனித்திறமை உடன் விளையாடும் போட்டியாளர்களை வெளியேற்றி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று பிரேத பரிசோதனை; சித்ரா மரணத்தின் மர்மம் விலகுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று ஓட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடைசியாக சித்ராவிடம் பேசியது என்ன? டிவி நடிகை சரண்யா பேட்டி!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது சின்ன திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

மசாஜ் மையத்தில் பாலியல் தொழில்: போலீசாரிடம் சிக்கிய டிக் டாக் ரவுடி பேபி சூர்யா!

டிக் டாக் மூலம் புகழ்பெற்ற சூர்யா என்ற பெண்ணை ரவுடிபேபி சூர்யா என்றே டிக்டாக்கில் உள்ளவர்கள் அழைப்பதுண்டு. டிக்டாக்கில் ஆபாச வசனங்கள், ஆபாச உடை அணிந்து ஆடும் நடனங்களால் இவர் புகழ் பெற்றார்.

விக்கி-நயன் இணைந்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும்