close
Choose your channels

கதாநாயகன் ஆகிறார் பிரபல வில்லன் நடிகரின் மகன்

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஒருசில படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது ஒரு படத்தை மீண்டும் இயக்கவுள்ளார்.

கடமான்பாறை' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் கதாநாயகியாகா அறிமுகமாகிறார். மன்சூர் அலிகானும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் ஆகிய இரு நாயகிகள் நடிக்கின்றனர். ரவிவர்மா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது:
                                     
காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை. பொண்ணுங்க கிட்ட   இருக்கிற ஒண்ணு  அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும்  அதுதான் கதை ! படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளோம். பக்கா கமர்ஷியல், காமெடி படமாக “ கடமான் பாறை “ உருவாகி உள்ளது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.