நடுரோட்டில் பாட்டு பாடியபடி படகில் செல்லும் தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,November 26 2020]

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் கனமழை பெய்து அதன் காரணமாக சென்னை உள்பட ஒருசில கடலோர நகரங்களில் வெள்ளம் புகுந்துள்ளது

மேலும் சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் தமிழ் நடிகர் மன்சூர்அலிகான் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து நடுரோட்டில் படகோட்டி கொண்டே பாட்டு பாடி செல்கிறார்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ’உயிரே உயிரே’ என்ற பாடலின் மெட்டில் ’புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடு’ என்று பாடிக்கொண்டே அவர் படகோட்டும் காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது

More News

வாணி போஜனின் அடுத்த பட ஹீரோ ஒரு தயாரிப்பாளரா?

'தெய்வமகள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒரு லாரியை அலேக்காகக் இழுத்து சாதனை படைத்த இரும்புத் தமிழன்… குவியும் பாராட்டு!!!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் சோழன் எனும் உடற்பயிற்சியாளர் ஒருவர் 91/2 டன் எடைக்கொண்ட லாரியை ஒருமுனை கயிற்றால் அதுவும் 90 மீட்டர் தூரத்திற்கு இழுத்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

ஒருவாரத்தில் மறுபடியும் ஒரு புயலா? தாங்குமா தமிழகம்?

நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்குதான் கரையை கடந்தது என்பதும், இந்த புயல் கரையை கடந்த சுவடு கூட இன்னும் போகவில்லை என்பதும் தெரிந்ததே.

விஷால்-ஆர்யாவின் 'எனிமி'யில் இணைந்த இன்னொரு 'எனிமி'

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது

ஜோடி போட்டு ரியோவை ரவுண்டு கட்டிய சனம்-அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா குருப்பை சக போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி தாக்கி வருகின்றனர். பாலாஜி ஆரம்பித்து வைத்த இந்த ரவுண்டில் சிக்கிய அர்ச்சனா குருப்பில்