close
Choose your channels

'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினார்கள்: மாளவிகா மோகனன் அதிர்ச்சி தகவல்

Saturday, June 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனக்கு மிகவும் நெருக்கமான பலர் ’பேட்ட’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அவர்களின் பேச்சைக் கேட்காமல் ’பேட்ட’ படத்தில் நடித்ததாகவும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருப்பார். சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த பூங்கொடி என்ற அந்த கேரக்டர் ஒரு சில நிமிடங்களே படத்தில் வரும் கேரக்டர் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டாம் என தனக்கு நெருக்கமான சிலர் அறிவுறுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

ஆனால் பூங்கொடி கேரக்டர் சிறிதாக இருந்தாலும் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருந்ததால்தான் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறினார். அதுமட்டுமின்றி அந்த கேரக்டரை நான் மிஸ் செய்திருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இழந்திருப்பேன் என்றும், மீண்டும் அவருடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியாது என்பதால் கிடைத்த வாய்ப்பை நான் மிஸ் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

’பேட்ட’ படத்தில் நடித்த அந்த கேரக்டர்தான் இன்று எனது கேரியருக்கே பாசிட்டிவாக அமைந்துள்ளது என்பதும் மாஸ்டர் படத்தின் வாய்ப்பு கிடைத்தது அந்த கேரக்டரில் நடித்ததால் தான் என்றும் மாளவிகா மோகனன் தனது பேட்டியில் கூறியுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.