கமலுடன் இணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தற்கால சமூக, அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அவருடைய சமூக வலைத்தள கருத்துக்களில் தெளிவான சிந்தனையும், ஆக்கபூர்வமான அறிவும் கலந்திருப்பதாகவே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய கருத்துக்கள் 90% தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

பொறுக்கிகள்' என்று தமிழர்களை கடுசொற்களால் வசைபாடிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கூட கமல் தன் எதிர்ப்பை நாகரீகமான வார்த்தைகளினால் மட்டுமே தெரிவித்தார். எந்த விதத்திலும் அவர் வன்முறையை தூண்டும்படியோ அல்லது அநாகரீகமான கருத்துக்களையோ சொல்லவில்லை என்பதுதான் நடுவிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரு கட்சி அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் கமலுக்கு ஆதரவு தெரிவித்தும் சமூக வலைத்தளத்தில் #TNstandswithkamal என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் இளைஞர்கள் கமலுக்கு ஆதரவான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல் கேட்கும் நாகரீகமான கேள்விகளுக்கு உரிய முறையில் பதில் சொல்வதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதைவிட்டு விட்டு அவர் மீது வழக்கு போடுவதால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

More News

கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். போலீஸ் புகார் செய்த அரசியல் கட்சி

தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'. ஃபர்ஸ்ட்லுக், ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'வேலைக்காரன்' என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே.

ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.

மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு

தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.