close
Choose your channels

'தர்பார்' படத்தில் மரணமாஸ் பாடல்: எஸ்பிபி தகவல்

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அவருடைய மாஸ் ஓப்பனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி வருவது தான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித் மட்டும் தனது இரண்டு படங்களில் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் 'பேட்ட' படத்தில் இருந்து மீண்டும் மாஸ் ஓப்பனிங் பாடல் ரஜினிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் 'தர்பார்' படத்திலும் ஒரு மரணமாஸ் ஓப்பனிங் பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை தானே பாடியிருப்பதாகவும் தகவல் தந்த எஸ்பிபி, அந்த பாடலுக்கான சூழலையும் விளக்கினார்.

அதாவது கடமையை சரியாக செய்த போலீஸ் கேரக்டர் ரஜினிக்கு ஒரு பாராட்டு விழா நடப்பதாகவும், கடமையை செய்த எனக்கு எதற்காக பாராட்டு விழா என்று கூறும் ரஜினி, 'சட்டையை போலீஸ் உடையை கழட்டிவிட்டால் நானும் உங்களில் ஒருவன் தான்' என்று கூறிவிட்டு ஒரு பாடலை பாடுவார் என்றும், அந்த பாடலைத்தான் நான் பாடினேன்' என்றும் எஸ்பிபி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.