close
Choose your channels

இளம் நடிகை, காதலருடன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம்… திரையுலகினர் அதிர்ச்சி!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தி மற்றும் மராத்தி சினிமாக்களில் பிசியாக நடித்துவந்த இளம் நடிகை ஈஸ்வரி தேஷ் பாண்டே தனது காதலருடன் கோவா சென்ற நிலையில் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்து உள்ளார். விபத்தில் 28 வயதான அவரது காதலரும் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

25 வயதான இளம் நடிகை ஈஸ்வரி தேஷ் பாண்டே. இவர் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்ததால் விடுமுறையை கொண்டாடும் விதமாக காதலர் சுபாம் தாட்கே(28) என்பவருடன் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கோவா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உணவருந்திவிட்டு கோவாவில் இருந்து காரில் திரும்பியபோது கார் விபத்துக்குள்ளாகி இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இளம் நடிகை உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய போலீஸ் நடிகையின் காதலர் சுபாம் தாட்கே காரை இயக்கியதாக உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. பெர்ரெஸ் எனும் தாலுகாவில் உள்ள அர்போரா அல்லது ஹட்ஃபேட் எனும் கிராமத்தின் வழியாகச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சிற்றோடையில் விழுந்து இருக்கிறது.

கார் மூடப்பட்டு இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் அல்லது உயிருக்காகப் பல மணிநேரம் போராடி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்த நிலையில் காலை 8.30 மணியளவில் தீயணைப்புத் துறையினர் இருவரின் உடலையும் மீட்டுள்ளனர்.

பிசியான நடிகையாக வலம்வந்த ஈஸ்வரி தேஷ் பாண்டே மற்றும் சுபாம் தாட்கே ஆகிய இருவரும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருந்ததாகவும் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் கார் விபத்தில் நடிகை மற்றும் அவரது காதலர் உயிரிழந்த சம்பவம் பலரையும் வருத்ததில் ஆழ்த்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.