கொரோனா 'கிட்'களை கொள்ளையடித்த குரங்குகள்: பொதுமக்கள் அச்சம்

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு வைத்திருந்த ரத்தமாதிரிகள் மற்றும் கொரோனா கிட்’களை குரங்குகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் மருத்துவக் கல்லூரியின் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென குரங்குகள் கூட்டமாக வந்து பரிசோதனை கூடத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் மற்றும் பரிசோதனைக்கு உதவும் கிட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றன

இந்த நிலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் மற்றும் கிட்களை எடுத்து சென்ற குரங்குகள் மரம் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவற்றை கடித்து துப்பியது அப்பகுதி மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக குரங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களுக்கு நிலவியுள்ளது

ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது குரங்குகள் உள்பட விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தமிழகத்தில் முதல்முறையாக 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 500 முதல் 600 பேர்களாக இருந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள்

இளையராஜாவுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்: கொரோனாவுக்காக ஒரு பாடல்:

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரசுக்கு எதிராக அனைத்து நாடுகளின் அரசுகளும் போராடி வருகின்றன. குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள்

அநாகரீகமாக நடந்து கொண்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த சரத்குமார்

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அரைநிர்வாணமாக யோகா செய்யும் பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகை அபிகைல் பாண்டே.

'காட்மேன்' தொடருக்கு எதிராக பிரபல நடிகர் போலீஸில் புகார்

சமீபத்தில் காட்மேன்' என்ற வெப்தொடரின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.