அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை ஆட்சி. மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த சசிகலாவுக்கு கடைசியில் கிடைத்தது ஜெயில் தண்டனைதான். ஆனாலும் சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தினகரனுக்கும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமிக்கும் கிடைக்கும்படி செய்துவிட்டு அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஆரம்பம் முதலே தமிழகத்தின் நிலையை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கருத்துக்களை நேற்றே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தின் ஆட்சி சிறையிலிருந்து நடக்க போகின்றது. சிறைக்கு செல்லும் முன்னர் சசிகலா, ஜெயலலிதாவால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தனது உறவினர் தினகரனுக்கு துணை பொதுச்செயலாளராகவும், அவர் சொல்படி கேட்கும் நபரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும் ஆக்கியுள்ளார்.

எனவே தமிழர்களே, வாழ்த்துக்கள்.. அடுத்த 4 ஆண்டுகளுக்கு, ஊழல் செய்து தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து உங்களை ஆளப்போகிறார். சிறைக்கம்பிகளுக்கு பின் இருந்து வரும் உத்தரவுகளை செயல்படுத்தும் ஒரு முதல்வராகவே எடப்பாடி பழனிச்சாமி இருப்பார்.

ஆனாலும் கவலைப்படாதீர்கள் தமிழக மக்களே உங்கள் மாநிலத்திற்கு முன்பே இதேபோன்று இன்னொரு மாநிலத்தில் நடந்துள்ளதால் நீங்கள் அடுத்த இடத்தில் தான் இருக்கின்றீர்கள்'

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ தனது சமூக வலைத்தளத்தில் வேதனையுடன் கூறியுள்ளார்.

More News

பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும்,

மக்களின் மனதை வெல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

2016ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளிவிபர புத்தகம். ஏவிஎம் சரவணன் வெளியிட்டார்

2016 ஆம் ஆண்டிற்கான திரைப்பட புள்ளி விபரங்கள் அடங்கிய புத்தகத்தை திரு: ஏவிஎம் சரவணன் அவர்கள் வெளியிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அமைச்சரவை பட்டியல்:

எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.