close
Choose your channels

துருவ்-மாரிசெல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா?

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்றும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் தூத்துக்குடியை சேர்ந்த கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் இதற்காக தூத்துக்குடியிலிருந்து கபடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு துருவ் விக்ரமுக்கு கபடி பயிற்சி அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’கபடி வீரர்’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நடிகர் நடிகைகளின் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூற படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.