close
Choose your channels

அடுத்த படம் இந்த நடிகருடன் தான்.. உறுதி செய்த மாரி செல்வராஜ் ..!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவலை அவரே கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் ’வாழை’ என்ற திரைப்படத்தை ஓடிடிக்காக இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வாழை’ புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என உறுதி செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த படம் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வேறு படங்களில் கமிட் ஆனதால் தாமதமானது என்றும் தனது அடுத்த படம் துருவ் விக்ரம் படம் தான் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். கபடி விளையாட்டை பின்னணியாக கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜுடன் இணையும் இந்த படம் துருவ் விக்ரமுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos