'பரியேறும் பெருமாள்' படத்திற்கு நான் நினைத்த முதல் ஹீரோ இவர் தான்: மாரி செல்வராஜ்


Send us your feedback to audioarticles@vaarta.com


’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உள்ளார். இந்த நிலையில், இன்று நடந்த சினிமா விழா ஒன்றில் பேசிய அவர், ’பரியேறும் பெருமாள்’ கதையை முதலில் தான் நடிகர் அதர்வாவிடம் தான் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
அதர்வா நடித்த 'டிஎன்ஏ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாரி செல்வராஜ் பேசியபோது, "நான் முதன்முதலில் ’பரியேறும் பெருமாள்’ கதையை அதர்வாவிடம் தான் சொன்னேன். அவருக்கு அது நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எனக்கு முரளி அவர்களை ரொம்ப பிடிக்கும். எனவே, அவருடைய மகன் அதர்வா நடித்த 'பாணா காத்தாடி' படத்தை பார்த்து, ’பரியேறும் பெருமாள்’ கதையின் ஹீரோவுக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன். அவரிடம் போய் நான் கதை சொன்னேன். ஆனால், அந்த சமயத்தில் அவருடைய தேதிகள் கிடைக்கவில்லை.
அதனால் வருத்தப்பட்டேன், அதன் பிறகு ஏழு வருடங்களுக்கு கழித்து இப்போதுதான் அவரைப் பார்க்கிறேன். அவருக்கு 'டிஎன்ஏ' திரைப்படம் ஒரு முக்கிய படமாக இருக்கும். இன்னும் பல உயரங்களுக்கு செல்லக்கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.
அதேபோல், "இயல்பான தோற்றம் கொண்ட நிமிஷா சஜயன் என் படத்தின் சில கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருப்பார் என என் உதவி இயக்குனர்களுடன் பலமுறை சொல்லி இருக்கிறேன். இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments