இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் விசேஷம்: திரையுலகினர் வாழ்த்து!

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது மட்டுமின்றி சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்தது. இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ்க்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது அவருடைய மனைவி திவ்யா மாரி செல்வராஜ் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்து திவ்யா மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’36 வாரங்கள் கர்ப்பம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த வளைகாப்பு விசேஷ நிகழ்ச்சியில் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.