இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் விசேஷம்: திரையுலகினர் வாழ்த்து!

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது மட்டுமின்றி சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்தது. இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ்க்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது அவருடைய மனைவி திவ்யா மாரி செல்வராஜ் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்து திவ்யா மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’36 வாரங்கள் கர்ப்பம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த வளைகாப்பு விசேஷ நிகழ்ச்சியில் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

More News

19 வயதில்.... ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பதும் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்

இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம் வைரல்!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் என்பது தெரிந்ததே. மூத்த மகள் கனி தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று

அகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன?

அகமதாபாத் மோதேரா மைதானத்தில் நடைபெற்று முடிந்த 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற முன்னணி பெற்று இருக்கிறது.

11 வருஷம்- ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி செய்தியுடன் நடிகை சமந்தா வெளியிட்ட வைரல் வீடியோ!

துறுதுறு நடிப்பால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தா,

தமிழகத்தில் தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா