கடமை தான் முக்கியம்! கல்யாணத்தை தள்ளி வைத்த தம்பதிகள்!

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

 

நேற்றைய தினம் இமாச்சலப் பிரதேசம் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நாடாளு மன்ற தேர்தல் 7 ஆவது கட்டமாக நடந்து முடிந்தது.

தேர்தல் தினமான நேற்று இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அணில்( 28 ) என்பவருக்கும் சரண்யா (24) என்கிற பெண்ணுக்கும் திருமண செய்து வைக்க பெரியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்று காலை 9 மணிக்கு இவர்களின் திருமண முகூர்த்தம் முடிவு செய்யப்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும், திருமணம் நடைபெறுவதற்கு முன் நேரடியாக மனாலியில் அமைக்கப்பட்ட ஓட்டு சாவடிக்கு சென்று தங்களின் தலையால கடமையான வாக்குரிமையை நிறைவு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் அணில், தானும் தன்னுடைய வருங்கால மனைவியும் முன்னரே இது குறித்து பேசி முடிவு செய்திருந்ததாகவும், அதன்படி தங்களுடைய திருமணம் சற்று தாமதமாக நடைபெற உள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஒவ்வொருவரின் வாக்கும் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகும் என தெரிவித்தார். இதனால் இவர்களுடைய திருமணம் மூன்றுமணி நேரம் கழித்து நடைபெற்றது.

 

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

விஐபி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: பிரபல நடிகை கணிப்பு

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில் தேசிய, மாநில ஊடகங்கள் நேற்று மாலை முதல் தங்களது எக்சிட்போல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

உலகிலேயே இதுதான் முதல்முறை: ரஜினிகாந்த்தின் பாராட்டு யாருக்கு தெரியுமா?

இயக்குனர், நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும்

200 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் கஷ்டம்: சென்னையின் நிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர்கஷ்டம் இருந்து வரும் நிலையில் ஃபானி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயலும் ஒடிஷா பக்கம் திரும்பிவிட்டதால்

இன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன்: கமல்ஹாசன்

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள 'ஒத்த செருப்பு' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது: