close
Choose your channels

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

Saturday, November 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி  தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்த தேர்தலில் போட்டியிட போவதாக ஏற்கனவே டிடிவி தினகரன் மற்றும் தீபா ஆகியோர் அறிவித்துள்ள நிலையில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ய இன்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடந்தது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதான மருதுகணேஷ் திமுகவின் வட்டச்செயலாளராக இருந்தவர். தற்போது நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக உள்ள இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசு மீது மக்கள் கோபமாக இருப்பதால் தனது வெற்றி உறுதி என்று மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு ஆதரவுதெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.