கொரோனா உயிரிழப்பால் பிணக்காடான டெல்லி… நாட்டையே உலுக்கும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் தற்போது இந்தியா முழுக்கவே ஒருவித பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநில அரசுகளுக்கு புது நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதைவிட உச்சபட்சமாக டெல்லியைச் சேர்ந்த சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் போதிய சிகிச்சை கிடைக்காமல் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 306 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளனர் என்றும் அவர்களின் சடலங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் வைத்து எரிக்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் நேற்றைய புதிய பாதிப்பு எண்ணிகை 3 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இந்நிலையில் உயிரிழப்பு 2,263 என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையில் டெல்லியில் மட்டும் 306 என்பதும் பதைக்க வைத்துள்ளது.

அதோடு நெருக்கடியான குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட டெல்லியில் தற்போது கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடலை ஒட்டுமொத்த குவியலாக வைத்து எரித்து வருகின்றனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்க ஊழியரான குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த தனது தாயின் உடலை எரிப்பதற்கு கிட்டத்தட்ட 2 நாட்கள் காத்திருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் தகன மேடையில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியர் கூறும்போது ஒரு வருடம் முழுவதும் எரிக்க வேண்டிய பிணத்தை ஒரே நாளில் வைத்து எரித்துக் கொண்டு இருக்கிறேன் என நெஞ்சம் கனக்கக் கூறுகிறார்.

இப்படி ஒட்டுமொத்த மாநிலமும் பிணக் குவியலாக காட்சி அளிக்கும் அளவிற்கு டெல்லியில் தற்போது கொரோனா நோய் தீவிரம் பெற்று வருகிறது. மேலும் பல இடங்களில் இடுகாடு பற்றாக்குறை காரணமாக வாகனங்களுக்கு இடையில் வைத்து எரிக்கும் நிலைமையும் அந்த மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு டெல்லியில் வைத்து எரிக்கப்படும் பிணங்களில் 5, 15, 25, புதுமணத் தம்பதிகள் என வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பதும் பார்ப்போரை கண்கலங்க வைத்து இருக்கிறது.

மேலும் டெல்லியில் வைத்து எரிக்கப்படும் கொரோனா பிணங்களால் மாநிலத்தில் ஆங்காங்கே நெருப்பு புகையும் வாடையும் வீசுவது கடந்த சில நாட்களில் இயல்பான ஒன்றாகவும் மாறி இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் எரிக்கப்பட்டு வரும் கொரோனா பிணங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதைக்க வைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் பாலா அறிமுகம் செய்த பிரபல நடிகருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' என்ற திரைப்படத்தில் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்கே சுரேஷ். அதன்பிறகு மருது, தர்மதுரை உள்பட ஒரு சில படங்களில் வில்லனாக

2 மணி நேரத்திற்குதான் ஆக்சிஜன் தாங்கும்… மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்!

கொரோனாவின் இரண்டாம் அலை தொற்றால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா,

கொரோனாவில் இருந்து மீண்ட ரியல் ஹீரோவான வில்லன் நடிகர்!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏராளமான பொதுமக்களுக்கும் உதவி செய்த பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்

உலக நாயகனாக இருந்தாலும் கமல் முட்டாள் தான்: எச்.ராஜா

பாஜக பிரமுகர் எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசன் உலக நாயகனாக சினிமாவில் இருந்தாலும் முட்டாள்

'குக் வித் கோமாளி' அஸ்வினின் வேற லெவல் புதிய லுக்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி முடிவடைந்தது என்பதும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே