லெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

லெபனானின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் நேற்று நிகழ்ந்த ஒரு பயங்கர வெடிப்பு விபத்து, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து பெய்ரூட் நகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்ததாகவும், முதலில் நகரின் மையப்பகுதியில் கருமையாக புகை சூழ்ந்திருந்ததாகவும், பின்னர் அந்த புகை நகர் முழுவதும் பரவியதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பெய்ரூட்டின் துறைமுகத்தில் நடந்த இந்த வெடி விபத்தால் துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடி விபத்தை அடுத்து நகரம் முழுவதும் புகை சூழ்ந்துள்ளதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து யு.என் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறியபோது, ‘இந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது இதற்கு பின்னால் யாரேனும் உள்ளார்களா என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

More News

தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறையினர் தீவிரமாக எடுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் தற்போது

அக்காவுக்கு பாலியல் தொல்லை: ஆணுறுப்பை சிதைத்த மச்சான்; திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் திருமங்கலம் பகுதியில் கணவரை அவரது மனைவியே கொலை செய்த சம்பவம் குறித்த செய்தியைப் பார்த்தோம்

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: உயிர் போகும் நிலையில் வீடியோவை வெளியிட்ட கணவர்!

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் கணவரையே கொலை செய்ய ஆள் வைத்து அடித்து சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

பல ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக தளபதி விஜய் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார்