close
Choose your channels

பெப்சிக்கு 'மாஸ்டர்' இயக்குனர் செய்த உதவி!

Tuesday, March 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படத்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரையுலக பிரபலங்கள் பலர் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் குவித்து வருகின்றனர்

ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய், சூர்யா 10 லட்சம் ரூபாய், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய், விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாய், என ஒருபக்கம் நிதி உதவி குவிந்து வரும் நிலையில் கலைப்புலி எஸ் தாணு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், உள்ளிட்ட பலர் அரிசி மூட்டைகளை கொடுத்து பெப்சி தொழிலாளர்களின் பசியை போக்க உதவி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பங்காக ரூபாய் 50 ஆயிரத்தை பெப்சியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பெப்சி தொழிலாளர்களின் பசியை தீர்க்க லோகேஷ் கனகராஜ் செய்த உதவிக்கு பெப்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.