கடும் போட்டியில் நிக்சன், மாயா.. இந்த வாரம் வெளியேறுவது யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும் என்றாலும் இந்த வாரம் எலிமினேஷனை பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பித்த நிக்சன் மற்றும் மாயா இந்த வாரம் சிக்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி விக்ரம் சரவணன் வெளியேறும் போது மாயா நடந்துகொண்ட விதம் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களை மிகப்பெரிய அளவில் பாதித்தது. எனவே மாயா அதற்கு என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றுதான் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரம் தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகியோர் நாமினேஷனில் இருக்கும் நிலையில் மாயா மற்றும் நிக்சன் ஆகிய இருவர்தான் மிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர்.
2 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் இதுவரை பதிவாகி உள்ள நிலையில் மாயா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் சுமார் 17,000 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இரண்டு இடத்தில் உள்ளனர். எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் மாயா வெளியேறினால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் தினேஷ் மற்றும் மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments