நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாயா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும், இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இரண்டாவது படத்திற்கு தயாராகிவிட்டார். அவரது அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் 'நெடுஞ்சாலை' நாயகி ஷிவேதா நாயர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தின் நாயகன் என்பதை உறுதி செய்த அஸ்வின், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும் 'மாயா' படத்திற்கு இசையமைத்த ரோன் யோஹான் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாகவும், மிகவிரைவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

கல் சிலைக்கு ரூ.2500 கோடி, உயிருள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.1750 கோடியா?

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த போராட்டத்தை இதுவரை சீரியஸாக கண்டுகொள்ளவில்லை...

அல்லு அர்ஜூன் அடுத்த படத்தில் ஆக்சன் கிங்

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரின் விருப்பமான நடிகர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜூன் திகழ்ந்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார&#

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த பட நாயகன் அறிவிப்பு

கமல், ரஜினி உள்பட பிரபல நடிகர்களின் படங்களை இயக்கி கடந்த பல வருடங்களாக கமர்ஷியல் மற்றும் வெற்றி பட இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய்க்கு அடுத்த இடத்தில் பிரபாஸ். 'பாகுபலி 2' விழாவில் வெளியான ரகசியம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்ப்பதால் பிரபாஸின் மார்க்கெட் தற்போதே எகிறியுள்ளது....

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...