வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என கமல்ஹாசன் இடம் ரெட்கார்ட் காட்டியதால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த சனி ஞாயிறு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ’பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்கள் கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னை பிளேயர் ஆக சேர்க்காதீர்கள் என்றும் நீங்கள் உங்களுக்கு அநியாயம் நடந்ததாக கூறி ரெட் கார்ட் கொடுத்ததால் தான் பிரதீப் வெளியேறினார் என்பதையும் திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக கூறி பிரதீப் வெளியேற்றத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தான் மாயா தனது தவறை உணர ஆரம்பித்தது போல் தெரிகிறது. ’பிரதீப் வெளியேற்றம் என்பது நம்மால் தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளியே அவருடைய ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது’ என்று நிக்சனிடம் கூறும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அப்போது நிக்சன் ’வெளியே போய் பிரதீப்பை நேரில் சந்தித்து சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூற அப்போதும் மாயா தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் ’அதெல்லாம் சந்திக்க முடியாது, அவன் என்ன பெரிய இவனா’ என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

அவங்களா வலையில வந்து விழுறாங்க.. விசித்ரா கூறியது யாரை? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக வருகிறது. குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஜோவிகா என்ற கூட்டணி அமைந்த உடன்

நண்பருக்கு ஒரு லட்டு, எதிரிக்கு ஒரு லட்டு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் டாஸ்க்..!

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படுகிறது

பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா? விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இனிமேல் பாக்க முடியுமா? பாத்தாலும் தடவி தூங்க வைக்க முடியுமா? ஐஷுவை நினைத்து புலம்பும் நிக்சன்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வெளியேறியது நிக்சனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் அவர் பார்க்கும் போட்டியாளர்களிடம் எல்லாம் ஐஷு வெளியேறியது குறித்து புலம்பி வரும்

இதுவரை இல்லாத வகையில் 5 வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள்.. 'கங்குவா' குறித்து பிரபலம் தகவல்..!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.