விசித்ரா - அர்ச்சனா திடீர் மோதல்.. சமாதானப்படுத்த முயற்சி செய்யும் மாயா.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Thursday,January 04 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு என்பது சாதாரணம் என்றாலும் இந்த சீசனில் சண்டை வராத நாளை இல்லை என்று கூறலாம். குறிப்பாக அர்ச்சனா கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையே மோதல் ஏற்பட்டது என்பதும் இது குறித்த காட்சிகள் இரண்டாம் புரமோவில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அர்ச்சனாவை சமாதானப்படுத்தும் வகையில் மாயா அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். முதல் வாரம் நீங்கள் மிகவும் ஸ்ட்ராங்காக ஒன்று சொல்கிறீர்கள், நான் இப்படித்தான் என்று, ஆனால் உடனடியாக நீங்கள் அதை மாற்றிவிட்டது விசித்ராவுக்கு புரியவில்லை என்று கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா ’இத்தனை நாள் என்னிடம் பழகி இருக்காங்க, ஆனால் அதை எல்லாம் பண்ணும் போது மனசுக்குள் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே தான் பண்ணினார்களா? என்று பதில் அளிக்கிறார்

அதற்கு மாயா ’நிஜமாகவே அவங்க உங்களை கூப்பிட்டு பேசுறாங்க என்றால் உங்கள் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தம்’ என்று கூறுகிறார். மேலும் 'இப்போ என்னால் அவ கூட பேச முடியுமா? அவ கோவமா இருக்காளா? என்று என்னிடம் கேட்கிறார்கள்’ என்று மாயா அர்ச்சனாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அனேகமாக அவருடைய முயற்சி வெற்றியில் தான் முடியும் என்று தான் தெரிகிறது.

More News

லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறக்கப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவு தினத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம்: விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார்..!

விஜயகாந்த் மறைவு தினத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்

என் வாழ்நாள் முழுவதும் இதுவொரு குறையாக இருக்கும்: நடிகர் கார்த்தி வருத்தம்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது என் வாழ்நாள் முழுவதும் ஒரு மனக்குறையாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி பேட்டி அளித்துள்ளார்.

கடைசி நேரத்தில் மட்டும் ஏன் சண்டை போடாம அமைதியா இருக்க? அர்ச்சனாவை கடுப்பேத்தும் விசித்ரா..!

ஆரம்பத்தில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த நீ, இப்போது நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அமைதியாக ஏன் இருக்கிறாய் என அர்ச்சனாவை தூண்டி விடுவது போல் விசித்ரா கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி

இந்த வார ஓடிடி ரிலீஸ் விவரங்கள்.. எத்தனை தமிழ் திரைப்படங்கள்?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதே அளவு ஓடிடியிலும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள்