close
Choose your channels

ஐபிஎல் போட்டியில் மிஸ் ஆன மாயந்தி லாங்கர்: அவரே கூறிய காரணம்!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டியில் மிஸ் ஆன மாயந்தி லாங்கர்: அவரே கூறிய காரணம்!

ஐபிஎல் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதும் அதைவிட முக்கியமாக தொகுப்பாளர்களின் தொகுப்புகள் மிக முக்கியத்துவம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

பாவனா, மாயந்தி லாங்கர் உள்பட ஒருசில அழகிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்பதும், குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் உள்பட பல சர்வதேச போட்டிகளில் மாயந்தி லாங்கர் தனது தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வந்தார் என்பதால் அவருக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்களாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது

எந்தவித சர்ச்சையும் இல்லாமல், யாரையும் அவதூறு இல்லாமல் இவர் ஆட்டத்தை தொகுத்து வழங்குவது மிகச்சிறப்பாக இருக்கும். குறிப்பாக இவரது இனிமையான குரல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிதானமாக தொகுத்து வழங்கும் பாணி ஆகியவை பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் குறித்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் மாயந்தி லாங்கர் பெயர் இல்லாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஒரு சில ஊடகங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மாயந்தி லாங்கரை கழட்டிவிட்டதாகவும் இனிமேல் அவர் தொகுப்பாளினியாக வர மாட்டார் என்றும் கூறியது

இந்த நிலையில் மாயந்தி லாங்கர் இந்த ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததற்கான காரணத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மாயந்தி லாங்கர் பிரபல கிரிக்கெட் வீரர் பின்னியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இதனையடுத்து மாயந்தி லாங்கர் கர்ப்பமாக இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளிவந்தது

தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தை பிறந்து ஒரு சில வாரங்களே ஆகியிருப்பதால் தன்னால் ஐபிஎல் போட்டியில் தொகுத்து வழங்க முடியவில்லை என்றும் இருப்பினும் மிக விரைவில் அடுத்த சில போட்டிகளை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தன்னை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒதுக்கியதாக ஒருசில ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனக்கு பல சலுகைகளை வழங்கி உதவி செய்ததாகவும், திட்டமிட்டப்படி ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கி இருந்தால் தான் தொகுத்து வழங்கியிருப்பேன்’ என்றும் கூறியுள்ளார்

எனவே இந்த ஐபிஎல் மிஸ் ஆனாலும் மீண்டும் விரைவில் தொகுப்பாளினியாக களமிறங்கி இருப்பதாக கூறி இருப்பது மாயந்தி லாங்கர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் ஆகும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.