close
Choose your channels

சாமியார் போர்வையில் பித்தலாட்டக்காரர்கள்: நடிகர் மயில்சாமி பேட்டி

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாமியார் என்ற போர்வையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா நாட்டை விட்டே வெளியேறி தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது அதே குற்றச்சாட்டில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது.

’ஆசிரமம், ஆடம்பரமான சாமியார்கள் யாரும் சாமியார்கள் கிடையாது. இதில் முக்கால்வாசி பேர் பித்தலாட்டக்காரர்கள் தான். சாமியாராக இருப்பவர்கள் ஆசிரமம் அமைத்து அதில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு குழந்தைகளையும் மற்றவர்களையும் ஏமாற்றி வாழ்கிறார்கள். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.

தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது. மதத்தின் அடிப்படையில் ஜாதி அடிப்படையில் சில பேர்களை விமர்சனம் செய்து கொண்டு முன்னேறுபவர்கள் அனைவரும் ஊரை ஏமாற்றும் நபர்கள் தான்’ என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.