close
Choose your channels

கடந்த ஆண்டு வெளியான படத்தின் இயக்குனருக்கு கனவு கார்.. சூர்யா, கார்த்தி கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

Sunday, May 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பக்கம் சூர்யா நடித்த ’ரெட்ரோ’ என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த படத்தின் இயக்குனருக்கு மஹேந்திரா கார் வாங்கி கொடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில், சூர்யா தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மெய்யழகன்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கு நடிகர் சூர்யா மகேந்திரா தார் காரை பரிசாக அளித்தார்.

இது குறித்து இயக்குனர் பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“மஹேந்திரா கார் வாங்க வேண்டும் என்று எனக்கு ஒரு கனவாக இருந்தது. ஐந்து கதவுகள் கொண்ட இந்த காருக்காக நான் காத்திருந்தேன். குறிப்பாக வெள்ளை நிறத்தில் இந்த காரை வாங்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பொருளாதார ரீதியாக தயாரானவுடன் வாங்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

இந்த நிலையில் எனது விருப்பத்தை அறிந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் என் விருப்பத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டார். ஆனாலும் எங்களுக்கு நான் கேட்ட நிறம் கிடைக்கவில்லை. இதனால் பொறுமை இழந்து, இப்போதைக்கு முடியாது என நினைத்த போது கூட, ராஜசேகர பாண்டியன் சார் ஒருபோதும் இந்த திட்டத்தை கைவிடவில்லை.

அவர் இதை மறந்து விட்டிருப்பார் என்று நான் நினைத்த நிலையில் திடீரென அப்டேட் கொடுத்தார். தற்போது வெள்ளை நிற மஹேந்திரா தார் கார் தயாராக இருப்பதாக் அவர் கூறியபோது, அந்த கார் நான் சேமித்து வைத்ததை விட அதிகமாக இருந்ததை நான் கூறினேன். அப்போது, அவர் அமைதியாக ஒரு திட்டம் போட்டார்.

நேற்று முன் தினம் திடீரென சூர்யா எனக்கு ஒரு கார் புகைபடத்தை அனுப்பினார். அதில் ‘அது வந்துவிட்டது’ என்று குறுஞ்செய்தியும் இருந்தது.

நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக ராஜசேகர பாண்டியன் அவர்களை அழைத்தேன். இப்போதைக்கு இந்த காரை வாங்க என்னிடம் காசு இல்லை என்றபோது, ‘இது சூர்யா உங்களுக்காக கொடுத்த பரிசு’ என்று கூறிய போது, நான் வாயடைத்து விட்டேன்.

என்னுடைய வீட்டிற்கு அந்த கார் வந்தபோது அதில் மெய்யழகன் கார்த்தியும் அந்த காரில் இருந்தார். என் கனவுகளை திறக்க என்னிடம் சாவியை ஒப்படைத்தார்.

நாங்கள் ஒரு சிறிய ரைடு சென்றோம். பின்னர் நான் தார் காரை அலுவலகத்திற்கு கொண்டு வந்தேன். இரண்டு நாட்கள் தான் ஆகிறது. ஆனாலும் குறைந்தது 50 கிலோ மீட்டர் ஓட்டி விட்டேன்.

என் கனவு நினைவானது போல் உணர்கிறேன். இதை நான் ஒரு பரிசாக பார்க்கவில்லை. ஒரு தம்பியின் கனவை நிறைவேற்றும் மூத்த சகோதரர்களாகத்தான் நான் இதை பார்க்கிறேன்,” என்று பிரேம்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment