close
Choose your channels

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்!!!

Monday, September 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்!!!

 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அக்கறையோடு செயல்பட வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருபோதும் தமிழக அரசு (இப்போதைய ஆளும் கட்சி) நீட் தேர்வை விரும்பவில்லை என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வினை கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதன்முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாக அவர்கள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கிக் கொடுத்தார். எனவே இந்தியா முழுக்க நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இத்தேர்வை ஒப்புக்கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைத்தவிர கடந்த 2017 பிப்ரவரியில் தமிழ்நாட்டை நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்குவதற்கு இரண்டு மசோதாக்களையும் அதிமுக (தமிழக அரசு) அறிமுகப்படுத்தியது. அது ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் நீட் தேர்வு 2017 இல் நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புத் திட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவந்தது.

இதற்காக 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் State board மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதையும் நீதிமன்றம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற Ordinanace கொண்டுவரவும் தமிழக அரசு முயற்சித்தது. இந்த முயற்சியின்போது எதிர்த்தரப்பினரே (இப்போது நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும்) சிலரே நீட் தேர்வு முக்கியம் என நீதிமன்றத்தில் வாதாடி முயற்சியை வீணடித்தனர் எனத் தற்போது தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க தற்போதைய ஆளும் அரசே காரணம் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தவறானது கருத்து என்பதை தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டியதோடு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் அரசாகவே தமிழக அரசு இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.