close
Choose your channels

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய்: மீனாவின் திருமண நாள் பதிவு

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய் என மீனா கடந்த ஆண்டு திருமண நாளின்போது பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென நுரையீரல் மற்றும் இருதய நோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், பல மாதங்களாக சிகிச்சை பெற்றார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு எடுத்தாலும் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மீனாவின் கணவர் மறைவு திரையுலகினர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருடைய மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் மீனாவுக்கு தங்கள் ஆறுதலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீனா தனது கணவரை எப்படி நேசித்து இருக்கிறார் என்பது கடந்த ஆண்டு அவரது திருமண நாளின்போது பதிவு செய்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து தெரிய வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: வானவில் போல என் வாழ்வில் வந்து சேர்ந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய், நீ எனக்கு அளித்த புன்னகையை எப்போதும் அணிந்துகொள்வதற்கான அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த இடம் என்று பதிவு செய்துள்ளார்.

இன்னும் 12 நாளில் மீனாவின் திருமண நாள் வர இருக்கும் நிலையில் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.