close
Choose your channels

மும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்

Thursday, October 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நான்கு வாரங்கள் மட்டுமே மீராமிதுன் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட அனைவரிடமும் பிரச்சனை செய்துவிட்டார். குறிப்பாக சேரன் தவறான நோக்கத்துடன் தன்னை தொட்டதாக குற்றஞ்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டு பொய் என்று கமலஹாசன் குறும்படம் மூலம் நிரூபித்த பின்னரும் வீட்டில் இருந்த போதும் சரி, வீட்டை விட்டு வெளியே வந்த போதும் சரி தொடர்ந்து சேரன் மீது தன்னுடைய குற்றச்சாட்டை கூறி வந்தார்

இந்த நிலையில் தற்போது மீண்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதில் சேரனை மட்டுமின்றி கமல்ஹாசனையும் சேர்த்து வம்புக்கு இழுத்துள்ளார். ஒரு பெண்ணுக்கு குட் டச் எது? பேட் டச் எது? என்று தெரியும் என்றும், இரண்டு பெண்களை பெற்ற கமல்ஹாசனுக்கும் சேரனுக்கும் இதுஎப்படி புரியவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள மீரா, நைட் பப் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் ஒரு இளைஞருடன் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து பாம்பு போல வளைந்து நெளிந்து அவர் நடனமாடியது, வீடியோவை பார்க்கும் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது

சேரன் தன்னை தொட்டதுக்கு நியாயம் கேட்டு போராடுவதாக கூறும் மீராமிதுன், முன்பின் தெரியாத இளைஞர் ஒருவருடனும், வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் நெருக்கமாக நடனம் ஆடியது குறித்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.