கணினி புரோகிராமில்… கின்னஸ் சாதனை படைத்த 2 ஆம் வகுப்பு இந்திய மாணவன்!!!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

 

கம்பியூட்டர் புரோகிராமைப் பார்த்து பெரியவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்போது நம்ம ஊரு 6 வயது சிறுவன் அதில் கின்னஸ் சாதனை புரிந்து இருக்கிறான். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அகமதாபாத்தைச் சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய கணினி புரோகிராமர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் உலகிலேயே இளம் கணினி புரோகிராமர் என்ற அடையாளத்தோடு தற்போது கின்னஸ் ரெக்கார்டைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்புவரை C, C++ போன்ற கணினி மொழிகளுக்கு அதிக மவுசு இருந்தது. அந்த இடத்தைத் தற்போது பைத்தான் கணினி மொழி பிடித்து விட்டது. இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலும் பைத்தான் கணினி மொழியே பரிந்துரைக்கப் படுகிறது. இந்த பைத்தான் கணினி மொழியை வெறுமனே 6 வயதில் நம்ம அகமதாபாத்தைச் சேர்ந்த அர்ஹாம் எனும் 6 வயது சிறுவன் கரைத்து குடித்து விட்டார்.

மேலும் இவர் 2 வயதில் இருந்தே கணினியையும் திறன் பேசியையும் கையாளப் பழகத் தொடங்கிவிட்டதாக அவனது பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். 3 வயது முதலே விண்டோஸ், ஐஓஎஸ் ஆகிய கணினி மற்றும் திறன்பேசியின் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினாராம். மேலும் அவரது தந்தை பைத்தான் மொழியை கையாள்வதைப் பார்த்து புதிர் போட்டிகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பதிலும் அர்ஹாம் பேரார்வம் கொண்டிருக்கிறார்.

இதைப்பார்த்த அவரது தந்தை அர்ஹாமுக்கு கணினிமொழியை வைத்து புரோகிராம் வடிவமைப்பதைக் கற்று கொடுத்து இருககிறார். அதை கற்றுக்கொண்ட அக்ஹராம் தற்போது கணினி புரோகிராம் வடிவமைப்பதில் படு கில்லாடியாக மாறிவிட்டார். சின்ன சின்ன கணினி விளையாட்டுகளையும் அவர் தானாகவே வடிமைப்பு செய்து தற்போது மைக்ரோசாப்ட் நடத்திய தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் உலகின் இளம் வயது கணினி புரோகிராமர் என்ற அடையாளத்தோடு கின்னஸ் சாதனைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

More News

தேர்தல் களத்துக்கு தயாராகி வரும் அஇஅதிமுக… விறுவிறுப்பான பணிகளால் உற்சாகம்!!!

தமிழகத்தில் அடுத்த மே மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் ரெடி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதில் ஒரு சில படங்களின் ஒட்டுமொத்த பணிகளும் முடிவுக்கு

ஜீஸஸ் என் ஃப்ரெண்டு தான், எண்ணெயில போட்டு பொரிச்சிடுவேன்: மூக்குத்தி அம்மன் ஸ்னீக்பீக்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நாளை தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

காலையில் சிம்பு, மாலையில் ஜெய்: சுசீந்திரனின் தீபாவளி திட்டம்!

மிக குறுகிய காலத்தில் திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் என்பதும் குறிப்பாக அவர் சிம்புவை வைத்தே 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தை 40 நாட்களில் முடித்து சாதனை செய்தவர்