மறைந்த தந்தையின் புகைப்படம் முன் விளையாடும் சிரஞ்சீவி சார்ஜாவின் மகன்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மரணமடைந்தபோது அவரது மனைவி மேக்னாராஜ் நான்கு மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேக்னாராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தையை பார்த்து தனது கணவரே மீண்டும் வந்து பிறந்ததாக உருக்கமாக மேக்னாராஜ் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மேக்னா ராஜ் தனது குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மேக்னாராஜ் குழந்தை தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் காட்சி உள்ளது. தந்தை மறைந்தது கூட தெரியாத வயதில் இருக்கும் அந்த குழந்தை தந்தையின் புகைப்படம் முன் விளையாடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் மிகவும் உருக்கமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறப்பது  இனப்படுகொலைக்கு நிகர்...! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மீண்டும் எழுந்து வருவேன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னணி தமிழ் இயக்குனரின் பதிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கொரோனா

'தளபதி 65' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது

'என்னடி முனியம்மா உன் கண்ணுல மை' புகழ் பாடகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

கடந்த சில நாட்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் காலமாகி வருவது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விவேக், தாமிரா, கேவி ஆனந்த் உள்பட பலர் தொடர்ச்சியாக காலமாகி வரும்

கோவிட் நோயாளிகளுக்காக 'மாஸ்டர்' மாளவிகா செய்த உதவி!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 21 ஆயிரம் பேர்களுக்கு