முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிவு: தமிழ் நடிகை அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

முன்னாள் முதல்வர் பேரனுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாக தமிழ் நடிகை ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ராந்த் நடித்த ’நெஞ்சில் துணிவிருந்தால்’ விஜய் தேவரகொண்டா நடித்த ’நோட்டா’ தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவருக்கும் அரியானா மாநில முன்னாள் முதல்வரின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பவ்யா பிஷ்னோய் உள்பட அவரது குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் பவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் பிர்சாதா திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நடிகை மெஹ்ரீன் பிர்சாதா தனது சமூக வலைத்தளத்தில் பவ்யா பிஷ்னோய் உடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்து விட்டதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் இதற்கு மேல் தனது ரசிகர்கள் விளக்கம் கேட்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இனி சினிமாவில் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் நல்ல படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

வனிதாவின் அதிரடி முடிவு குறித்து ஒரே வார்த்தையில் கமெண்ட் அளித்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை வனிதா விஜயகுமார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விஜய் டிவியிலிருந்து தான் வெளியேறுவதாகவும், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும்

'தலைவி 2' எடுத்தால் ரஜினி சொன்ன விஷயங்கள் இணைக்கப்படும்: மதன் கார்க்கி 

'தலைவி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் கண்டிப்பாக ரஜினி கூறிய சுவாரசியமான விஷயங்கள் அதில் சேர்க்கப்படும் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 'தலைவி' படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி

ஆன்லைன் வகுப்பில் மாணவர் செய்த சேட்டை… லைவ்வாக செக்ஸில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!

கொரோனா காரணமாகக் கல்வி முறையே மாற்றம் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரி வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடைபெற்று வருகின்றன

ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க்கோடு வலம்வரும் மனிதர்… வைரல் புகைப்படம்!

உத்திரப்பிரதேசம் கான்பூரில் எப்போதும் கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்து வலம்வரும் நபர் ஒருவர் தற்போது ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரத்யேக  மாஸ்க்கை உருவாக்கி அணிந்து வருகிறார்.

ஊருக்கு உபதேசம் செய்து, 9 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்… நெட்டிசன்கள் கேலி!

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் அம்மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு இடையே கடும் அரசியல் போர் நடைபெற்று வருகிறது.