தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் நடிகர் தனுஷ்க்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கதிரேசன் - மீனாட்சி தம்பதியரின் இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனுஷின் அங்க அடையாளங்கள் குறித்த அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

More News

பாஸ்போர்ட் விவகாரம். குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நடிகை குஷ்புவின் பாஸ்போர்ட்டை அவர் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட் அதிகாரி புதுப்பிக்க மறுத்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் குஷ்புவுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அருண்விஜய்யின் 'குற்றம் 23'. திரை முன்னோட்டம்

திரையுலகின் பின்னணி இருந்தும், 'முறை மாப்பிள்ளை' தொடங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தும் கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க கடந்த இருபது வருடங்களாக போராடி வருபவர் நடிகர் அருண்விஜய்...

எனது பெயரில் வன்முறை அறிவுரை. உடனே நிறுத்துக. கமல் வேண்டுகோள்

உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாக ஒரு இணையதளத்தில் சில வன்முறை கருத்துக்கள் பதிவாகியுள்ளது

இளைஞர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் நடத்தும் அடுத்த போராட்டம்

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது அதைவிட முக்கிய பிரச்சனையான நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களமிறங்கவுள்ளார்.

நெடுவாசல் போராட்டம் குறித்து நடிகர் சங்கத்தின் முக்கிய முடிவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராடிய போராட்டத்திற்கு இணையாக தற்போது நெடுவாசல் போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.