close
Choose your channels

கோவையில்.. மாலை போட்டு.. நாய்க்கு தாலி கட்டிய பாரத் சேனா அமைப்பினர்..!

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில்.. மாலை போட்டு.. நாய்க்கு தாலி கட்டிய பாரத் சேனா அமைப்பினர்..! காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரத் சேனா சார்பில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நாய்களுக்கு தலையில் பூக்களை வைத்தவாறு, பாரத் சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கள் கைகளில் தாலியை பிடித்தவாறு நின்றனர்.

அதே கோவையில் சக்தி சேனா என்ற அமைப்பினர் ஹோம குண்டலம் அமைத்து இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். நெருப்புக்கு பயந்து நாய்கள் ஓட முயல அதன் உரிமையாளர்கள் மடியில் தூக்கி வைத்து பிடித்துக் கொண்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரத் மற்றும் சக்தி சேனா அமைப்பினர் மேற்கொண்ட இந்த செயல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.