ஜெயமோகனுக்கு எதிராக திரண்ட வணிகர் சங்கங்கள்: காவல்துறையிலும் புகார்

  • IndiaGlitz, [Monday,June 17 2019]

எழுத்தாளர் ஜெயமோகன் புளித்த மாவு வாங்கிய விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயமோகனை அடித்த கடைக்காரர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் ஜெயமோகனுக்கு எதிராக வணிகர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளனர். புளித்த மாவு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

புளித்த மாவாக இருந்தால் தூக்கி போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்பதை விட்டுவிட்டு, லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு எழுத்தாளர் ஒரு சிறிய விஷயத்திற்காக தனது பெயரையும் புகழையும் கெடுத்து கொள்ள வேண்டுமா? என்று சமூக வலைத்தள பயனாளிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.