மெர்சல் ஆடியோ விழாவில் மெரினா ஜல்லிக்காட்டின் ஒலி-ஒளி காட்சி

  • IndiaGlitz, [Sunday,August 20 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகளும் உண்டு என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் சற்றுமுன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த ஒலி-ஒளி காட்சி மெர்சல் இசை வெளியீட்டு விழா அரங்கத்திலும் நடைபெற்றது.

மாணவர்களின் மெரினா ஜல்லிக்கட்டின்போது செல்போன் டார்ச் லைட்டால் லட்சக்கணக்கான ஒளிக்கதிர்களின் கண்கொள்ளா காட்சி நடந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்றைய மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதேபோன்ற செல்போன் ஒளிக்காட்சி விஜய் ரசிகர்களால் நடைபெற்றது. அதுமட்டுமின்றி விஜய் ரசிகர்களின் கரகோஷ ஒலி விண்ணை பிளக்க வைக்கும் வகையில் இருந்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் சாதனை வெற்றி பெற்றது போல் 'மெர்சல்' படமும் நிச்சயம் வெற்றி மகுடம் சூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உலகின் மிகச்சிறந்த ஆயுதம் விஜய்யிடம் உள்ளது. மெர்சல் விழாவில் தனுஷ்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடந்து வருகிறது...

உ.பி. ரயில் விபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு கமல்ஹாசன் இரங்கல்

உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த ரயில் விபத்து ஒன்றில் 23 பே பலியாகினர் என்பதும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

ஹங்கேரி நாட்டில் 'விவேகம்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் சுமார் 95% திரையரங்குகளில் 'விவேகம்' திரைப்படம் வெளியாகவுள்ளது என்பதை நேற்று பார்த்தோம்...

விஜய் 62: விஜய்யின் அசாதாரண இன்னொரு பக்கம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் ஒருசில மணி நேரங்களில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இன்றுமுதல் ஒவ்வொரு இளைஞனின் தேசியகீதமாக மாறவுள்ளது...

'தெறி' தெறிச்சிருச்சு, 'மெர்சல்' மிரட்டும்: அட்லி

தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வளர்ந்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான ஆங்கில ஊடகம் ஒன்றின் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அட்லி தனது மனைவி ப்ரியாவுடன் கலந்து கொண்டார்...