'மெர்சல்' ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,August 15 2017]

தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ விழா என்றாலே அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதுதான். இருப்பினும் நேரம், இடம் கருதி ஆடியோ விழா நடைபெறும் இடத்தில் ஒருசில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 'மெர்சல்' ஆடியோ விழா இந்த மனக்குறையை போக்கியுள்ளது.

ஆம், ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள 'மெர்சல்' ஆடியோ விழா ஜீதமிழ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் இந்த விழாவை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் நேரடியாக கண்டுமகிழும் வாய்ப்பு உள்ளது.

'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே பல சாதனைகளை தவிடுபொடியாக்கி வரும் நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றின் ஆடியோ விழா இதற்கு முன் நேரடியாக ஒளிபரப்பாகியது இல்லை என்ற நிலையில் இந்த சாதனையையும் புதியதாக ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விழாவில் இசையமைப்பாளர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஓரிரண்டு பாடல்களை நேரடியாக பாடவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில் இந்த நேரடி ஒளிபரப்பு செய்தி விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு இன்ப அதிர்ச்சிதான்.

More News

பேரன்பின் ஆதி ஊற்று : நா.முத்துக்குமார்

ஒரு பாடலாசியர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2016 ல் இறந்துவிடுகிறார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2017 வரை கிட்டத்தட்ட ஒரு வருடமாக....

ராகவா லாரன்ஸ் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் ரிலீஸ் ஆன தினமே 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தினால் பெரும் சிக்கலை படக்குழுவினர் சந்தித்தனர்...

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிக்பாஸ் பங்கேற்பாளர்

பிக்பாஸ் தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நீங்க எல்லோரும் போய் சாவுங்க: எரிச்சலின் உச்சத்தில் ரைசா

சக்தி இல்லை என்றால் சிவன் இல்லை என்பது உலக வழக்கு. சக்தி இல்லையேல் காயத்ரி இல்லை என்பது பிக்பாஸ் வழக்கு. சக்தி போன சோகத்தில் இருந்து மீளாத காயத்ரி தனது அத்தனை கோபத்தையும் ரைசா மீது காட்ட தொடங்குகிறார் என்பது இன்றைய புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது...

ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண பில் அனுப்பிய மின்வாரிய துறை

மின்வாரிய கட்டணம் சில சமயம் திடீரென லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வந்து வீட்டின் உரிமையாளரின் மாரடைப்புக்கு காரணமாக அமையும், அந்த வகையில் சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடி மின்கட்டண பில் வந்துள்ளது...