close
Choose your channels

மெர்சல் டைட்டில் வழக்கின் அதிரடி தீர்ப்பு

Friday, October 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளிவரும் என்று அனைத்து தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 'மெர்சல்' படத்தின் தலைப்பு தன்னுடையது என்று ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி அக்டோபர் 6 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் 'மெர்சல்' படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலைப்புக்கு எதிராக தாக்கல் செய்த ராஜேந்திரன் என்பவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மெர்சல் டைட்டிலுக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து 'மெர்சல்' தலைப்பிலேயே விளம்பரம் செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வெளிவந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே 'Mersaljudgementday என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் தொடங்கி அதில் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர். 'மெர்சல்' டைட்டிலுக்கான தடை நீங்கியுள்ளதால் வரும் தீபாவளி அன்று இந்த படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.