close
Choose your channels

ஐந்து மொழிகளில் உருவாகும் 'சீதா': திரைக்கதை எழுதும் 'மெர்சல்' பிரபலம்!

Saturday, February 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராமாயணத்தின் நாயகியான ‘சீதா’ என்ற கேரக்டரை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் அவர்கள் திரைக்கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ‘சீதா’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. ராமாயணத்தின் நாயகியான சீதா குறித்து பலரும் அறிந்திராத பல விஷயங்களை இந்த படத்தில் காண்பிக்க இருப்பதாகவும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு திரைக்கதை எழுத விஜயேந்திர பிரசாத் அவர்கள் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ‘மெர்சல்’ உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசாய் என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்தின் வசனம் மற்றும் பாடல்களை மனோஜ் முண்டாஷீர் எனப்வர் எழுதவுள்ளார் என்றும், இந்த படத்தில் ‘சீதா’ கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகை உள்பட மற்ற தகவல்கள் விரைவில் படக்குழுவினர் வெளியிட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.