close
Choose your channels

தொட்டாலே ஷாக்… வானத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த கல்லால் பரபரப்பு!!!

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொட்டாலே ஷாக்… வானத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த கல்லால் பரபரப்பு!!!

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த தீர்த்தாண்டதானம் எனும் இடத்தில் நேற்றுமுன் தினம் பயங்கர சத்தத்துடன் ஒரு கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீடு அருகே விழுந்த இந்தக் கல்லைத் தொட்டாலே மின்சாரம் பாய்வதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இது விண்கல்லாக இருக்குமோ என்ற அச்சத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரச் சத்தத்துக்கு நடுவே வானத்தில் இருந்து ஒரு விசித்திரக் கல் விழுந்தது என்று கூறப்படும் நிலையில் அந்தக் கல்லைத் தொட்டால் மின்சாரம் பாய்வதாகவும் அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்தக் கல்லை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் அந்தக் கல் பார்ப்பதற்கு விசித்திரமாக இருப்பதால் ஒருவேளை விண்கல்லாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வானத்தில் இருந்து அவ்வபோது எரிக்கல் விழுவது வழக்கம்தான் என்றாலும் தொட்டாலே மின்சாரம் பாயும் கல்லைக் குறித்து தொண்டி பகுதியில் தற்போது கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.