close
Choose your channels

தமிழ் சினிமாவில் முதல்முறை: விஜய்யின் மாஸ்டர் குறித்த ஆச்சரிய தகவல்

Sunday, February 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கலை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கும் சதீஷ்குமார் பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘மாஸ்டர்’ படத்திற்காக சுமார் 15 செட்டுக்கள் போட்டதாகவும் அவற்றில் ஒன்று மெட்ரோ ரயில் நிலைய செட் என்றும் கூறினார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் மெட்ரோ ரயில் நிலையம் செட் போட்டு படமாக்கப்பட்ட முதல் படம் ‘மாஸ்டர்’ என்பது தெரிய வருகிறது.

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.