அமெரிக்கர்கள் நுழைய கூடாது என மெக்சிகோ போராட்டம்: தலைகீழாக மாறிய நிலை

’ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்று தமிழில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. அதைப்போல் மெக்சிகோ நாட்டவர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டின் வழியாக வரும் வேறு நாட்டவர்கள் அமெரிக்காவுக்கு நுழையக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும் மெக்சிகோ-அமெரிக்கா இடையே சுவர் கட்ட போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நிலைமை அப்படியே தற்போது தலைகீழ் ஆகியுள்ளது. தற்போது அமெரிக்க மக்கள் யாரும் மெக்சிகோவிற்குள் நுழையக்கூடாது என மெக்சிகோ மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் தாக்கப்பட்டவர்கள் அமெரிக்கா தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அண்டை நாடான மெக்சிகோவிற்கு கொரோனா வைரஸ் பயம் காரணமாக செல்வதாக தெரிகிறது.

இதனை அடுத்து மெக்சிகோ மக்கள் எல்லை அருகே போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர். அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வருவதால் மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவி விடும் என்றும் அதனால் அமெரிக்கர்கள் மெக்சிகோவிற்குள் நுழையக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவை அமெரிக்கா எச்சரிக்கை செய்த நிலை மாறி தற்போது அமெரிக்கர்களை மெக்சிகோ மக்கள் விரட்டும் அளவுக்கு மாறியுள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More News

கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்!!!  

கொரோனா Covid-19 உலகின் அனைத்து நிலைமைகளையும் கடுமையாகப் பாதித்துத் இருக்கிறது. சுற்றுச்சூழலைத் தவிர

கேரளாவில் கொரோனாவிற்கு முதல் பலி: துபாயில் இருந்து திரும்பியவர்

இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும் நேற்றுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை: திடீரென தற்கொலை செய்த சென்னை நபர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பணக்காரர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: 40ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளிகள் கடும் அவதி!!! 200 கி.மீ வரை நடந்தே செல்லும் அவலம்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது